கோல்ட் கிட்டார் விருது விழாவிற்கு சென்ற வடக்குத்தீவை சேர்ந்த ஒரு ரசிகர் குழுவின் வேன் கேன்டர்பரி சாலையில் ஒரு லாரி மீது மோதி மின் கம்பத்தில் முட்டி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

லாரி ஓட்டுநர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்றையதினம் காலை 10 மணியளவில் ஆஷ்பர்டன் அருகே எல்ஜினில் உள்ள கோக்ரேன்ஸ் மற்றும் வகானுய் சாலைகள் சந்திக்கும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கவனக்குறைவின் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் நம்புகின்றனர்.

விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் நான்காவது நபர் ஆஷ்பர்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.