தஜிகிஸ்தானுக்கு ஆயுதம் விநியோகிப்பதற்கு பாகிஸ்தான் சம்மதித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான் இரு நாள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.

மேலும், இஸ்லாமாபாத்திலுள்ள பிரதமர் இல்லத்தில் தஜிகிஸ்தானின் ஜனாதிபதியை பகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றார்.

பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது மிக அவசியமானது என, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.