பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும், மாஸ் திரைப்படம் சூர்யாவின் நாயகி பிரணிதாவுக்கும் நேற்று திருமணம் நடந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக யாருக்கும் சொல்லவில்லையாம். இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரும் தான் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரணிதா, நிதினுக்கு நெருக்கமான ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் தான் அதுவே தெரியவந்தது.

இது குறித்து பிரணிதா, நிதினுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது,

திருமணத்தை பிரமாண்டமாக நடத்தவே அவர்கள் இருவரும் விரும்பினார்கள். ஆனால் கொரோனா இரண்டாம் அலையால் அது இயலாமல் போய்விட்டது.இதையடுத்தே எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள் என்றார்கள். 

அருள்நிதியின் உதயன் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரணிதா சுபாஷ், கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.மேலும் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார் பிரணிதா.இந்நிலையில் ஹங்காமா 2 இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.