இலங்கைக்கு கடத்த வைத்திருந்த ஊட்டச்சத்து ஊசி மருந்துகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல்...

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஊட்டச் சத்து ஊசி மருந்துகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இந்திய கடலோர காவல்படை முகாமுக்கு நேற்று இரவு தங்கச்சிமடம் அந்தோனியார்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருள் கடத்தி தயாராக இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர காவல்படை அதிகாரிகள் கடற்கரை முழுவதும் சுமார் மூன்று மணி நேரம் சோதனை செய்ததில் கருவேல மரத்திற்கு அடியில் பாலிதீன் கவர்களால் சுருட்டி வைக்கப் பட்ட முட்டை ஒன்றை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு கொண்டு வந்து பிரித்து பார்த்தபோது ஊட்டச் சத்து ஊசி மருந்துகள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 2ml அளவுள்ள சுமார் 6000 ஊசி மருந்து பாட்டில்கள் என்றும் தற்போது இலங்கையில் கொரானா நோய்த்தொற்று அதிகரித்திருப்பதால் ஊட்டச்சத்தாக ஊசி மருந்துகள் இங்கிருந்து கடத்தல்காரர்கள் கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் இலங்கையின் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என்றும் தெரிவித்த அதிகாரிகள் கடத்தல்காரர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகள் குறித்தும் கடற்கரை பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் பறிமுதல் செய்யப்பட்ட ஊசி மருந்துகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர்.