தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் நாகர்ஜுனா தனது கனவை நிறைவேற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் சினிமா அருங்காட்சியகம் ஒன்றை ஆரம்பிப்பதே இவரது கனவாகும்.

இதுகுறித்து நாகர்ஜுனா தெரிவிக்கையில்....

“தெலுங்கு சினிமாவுக்காக ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது எனது கனவு, திரைப்பட பயிற்சி கருத்தரங்கு ஒன்றை நடத்தியபோது சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களை பார்த்து வியந்தேன்.

அப்போது தெலுங்கு திரைப்பட துறையில் உள்ள அம்சங்கள் அனைத்தையும் சேகரித்து அருங்காட்சியகம் அமைக்கும் எண்ணம் தோன்றியது. இதனை செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள திரைப்பட சாதனையாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.

தற்போது கொரோனா தொற்றால் இந்த திட்டத்தை தாமதமாகியுள்ளது. அருங்காட்சியகத்துக்கான பொருட்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நூலகங்கள் போல திரைப்படங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை'' என தெரிவித்தார்.