ஏழை மக்களின் பசியைப் போக்க அஜித் ரசிகர்கள் செய்த நற்செயல் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகியுள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வுகள் மூலம் கேட்டுகொள்ளப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் புதுச்சேரியில் அஜித் ரசிகர்கள், ‘பசித்தால் எடுத்துக்கொள்’ என்ற பதாகையுடன் கூடிய தள்ளுவண்டியில் சாப்பாடு, தண்ணீர் போத்தல்கள், வாழைப்பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை நிரப்பி, தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்லும் விதமாக அந்த வண்டியை சாலையோரம் நிறுத்திவைத்துள்ளனர்.

இது குறிப்பாக சாலையோரம் வசிப்பவர்களுக்கின் பசியை போக்க பெரிதும் உதவியாக உள்ளது.

இத்தகைய நற்செயலை செய்த அஜித் ரசிகர்களுக்கு சமூகத்திலும் சமூக வலைதளங்களும் பாராட்டப்பட்டு வருகின்றனர்.