புரெவி புயல் திருகோணமலை அருகே தற்போது கரையை கடந்தது. புயல் இன்று பாம்பன் அருகே கரையை கடக்கிறது.

 

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது
புயல் கரையை கடந்து வரும் நிலையில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

 

திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்துள்ள புயல் இன்று பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது.

 

பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே இன்று (3-ம் தேதி) நள்ளிரவு முதல் நாளை (4-ம் தேதி) அதிகாலை வரை புரெவி புயல் கரையை கடக்கிறது.