ஊசியே இல்லாமல் நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

எல்லோரும் இடது கையில் ஊசி போட்டுக் கொள்ள, நயன்தாரா மட்டும் வலது கையில் தடுப்பூசி போட்டிருந்தார். அதோடு அந்தப் படத்தில் ஊசி போடும் செவிலியர் கையில் ஊசியே இல்லாது போல் தெரிந்தது. இதனால் ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா நயன்தாரா என்ற ரீதியில் சர்ச்சை எழுந்தது.

ஆனால் செவிலியரின் உள்ளங்கையில் ஊசி இருந்திருக்கலாம் எனவும், படத்தில் அது தெரியாமல் இருக்கிறது எனவும் நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் ஊசி போட்டு விட்டு, பின்னர் புகைப்படத்திற்கு பாவணை செய்த படமாகவும் இது இருக்கலாம் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.