கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உலகத் தமிழர்கள் உதவ வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று சாமானியர் முதல் தொழிலதிபர்கள் வரை நிதி உதவியை வழங்கி வருகின்றனர்.கவிஞர் வைரமுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்காக ரூ5 லட்சம் வழங்கினார்.