நியூசிலாந்து நாட்டின் தெற்கே நடந்த கத்தி குத்து சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவின் தென்கிழக்கு கடலோர பகுதியில் அமைந்த டுனெடின் நகரில் பல்பொருள் விற்பனை அங்காடி ஒன்றில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது 4 பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து தாக்குதலை நடத்திய நபரை பொலிஸார் கைது செய்ததுடன் அவரது அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை.

இந்த சம்பவத்தில் அந்த நபரும் காயமடைந்து உள்ளார்.  அவர் உட்பட இந்த சம்பத்தில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்