கே.வி. ஆனந்த் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.செல்லும் வழியில் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆம்புலன்ஸிலேயே அவரது உடல் வைக்கப்பட்டு இறுதியாக குடும்பத்தினருக்கு காட்டப்பட்டது. ஆம்புலன்ஸில் இருந்த கேவி ஆனந்தின் உடலை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.