ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் தினமும் இரவுக் காட்சிகளை ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வரும் நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் மீண்டும் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பி உள்ளனர். அந்தவகையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.