இந்தியாவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்குக்கு இணையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பல்க்குகள், ஹோட்டல் / உணவகங்கள், வீட்டு விநியோக உணவு நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.