Waihī இற்கு தெற்கே உள்ள மாநில நெடுஞ்சாலை 2 இல் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
மாலை 5.40 மணியளவில் Tauranga வீதி அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆறு ஆம்புலன்ஸ்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன.
காயமடைந்தவர்களில் இரண்டு பேர் விமானம் மூலம் வைகாடோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் மூன்று பேர் ஆம்புலன்ஸ் மூலம் Tauranga மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை 2 சிறிது நேரம் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி நிருபர் - புகழ்