தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டியை நியூசிலாந்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள், தமிழ் பத்திரிக்கைகள் ஆகியன இணைந்து நடத்த முடிவு செய்துள்ளன. பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ள இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ் அமைப்புக்களை சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.

டனீடின் தமிழ் சங்கம், நியூசிலாந்து தமிழ்ச் சங்கம், கான்பரா தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 'நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக் 2021' என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிக்கு நியூசிலாந்தில் செயல்பட்டு வரும் தமிழ் பத்திரிக்கைகள், ஊடகங்கள் ஆகியன அனுசரணை வழங்குகின்றன. .