மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக குற்றம்சுமத்தப்பட்டு அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரன் என்பவரே யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக நேற்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக தீப்பந்தங்களை அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார்.
அருட்தந்தை தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.