கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக தொடங்கிவிட்டன.இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கிவிட்டது என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.

சமீபத்தில் தான் அமீர்கானிற்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரை தொடர்ந்து நடிகர் மாதவனிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில்”பார்ஹான் என்பவர் ராஞ்சோவை பின் தொடர்ந்தார். ஆனால் இவர்களை இந்த வைரஸும் பின் தொடர்ந்துள்ளது. தற்போது பெரிய பிரச்சனை இல்லை எனவும், தான் விரைவில் நலம் பெற்று வருவேன்.

தமக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றிகள் என அந்த பதிவில் நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.