இலங்கை

இலங்கை விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், நேற்று (10) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்திப்பில் இளவரசி Anne, கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூம் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை- பிரித்தானியா இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் இளவரசி ஆன் நேற்றையதினம் காலை இலங்கையை வந்தடைந்தார்.

இந்த ஆண்டின் (2024) பிரித்தானிய அரச குடும்பத்தின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இரு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இளவரசி ஆன், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு செல்ல உள்ளார்.

இளவரசி ஆன், மறைந்த எலிசபெத் மஹாராணியாரின் இரண்டாவது மகளும் ஒரேயொரு பெண் வாரிசும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் ஒரே ஒரு சகோதரியும் இவர் என்பது குறிப்பித்தக்கது.