அனர்த்தங்களால் அவதிப்படும் மக்களுக்கு உதவும் முகமாக, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி SMM முஷாரப் அவர்களின் வழிகாட்டலிலும் பங்களிப்பிலும் ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த நிவாரண உதவி, தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணங்களை வழங்கும் ஏற்பாடுகளை துரிதமாக செயற்பட்டு வருகிறது.

அதன் முதல் அங்கமாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி SMM முஷாரப் அவர்களினால் பொத்துவில் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுப் பொதிகள் வழங்கும் பணி இன்று (11.01.2024) முதல் ஆரம்பமாகவுள்ளது.

சீரற்ற காலநிலையால் தோன்றியுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக நமது சொந்தங்கள் பலரும் தமது உறைவிடங்களை விட்டு அகல வேண்டியேற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒருவேளை உணவுக்காக அல்லல்படுகின்றனர்.

அவர்களின் பசியைப் போக்க இந்த திட்டம் நல்ல ஆரம்பமாக அமையவுள்ளதாக இங்கு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் குறிப்பிட்டார்.