இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டால் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது விசேட அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், எம்.பிக்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டதாகத் தெரிவித்தார்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டால் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம் அளித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.