ஆக்லாந்து புறநகர் பகுதியான Point England இல் Charles Pongi  என்ற நபரை கொலை செய்ததாக Mt Albert ஐ சேர்ந்த 24 வயது இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

32 வயதான Charles Pongi கடந்த ஆகஸ்ட் மாதம் Taurima Reserve பகுதியில் மூன்று கும்பலைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூடியிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து குற்றவாளியை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் துப்பறியும் நபர்கள் மற்றும் ஆயுதமேந்திய குற்றவாளிகள் படை இன்று காலை ஆக்லாந்து முழுவதும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆக்லாந்து சிட்டி சிஐபி டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் க்ளென் பால்ட்வின், 24 வயது இளைஞன் மீது கொலை, தாக்குதல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்