Dunedin இல் உள்ள Bayfield உயர்நிலைப் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வந்த‌ மிரட்டலை அடுத்து பள்ளி உடனடியாக மூடப்பட்டது.

காலை 8.45 மணிக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, ஆயுதமேந்திய அதிகாரிகள் Bayfield பள்ளியை சுற்றிவளைத்து காவலுக்கு நின்றிருந்தனர்.

என்ன அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

குழந்தைகள் அனைவரும் பத்திரமாக இருந்தாலும் பள்ளி முடக்கத்தில் இருப்பதாக பள்ளி நிர்வாகம் சமூக ஊடகங்களில் பதிவிட்டது.

ஒரு போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பள்ளிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

நாள் முழுவதும் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஆயுதம் தாங்கிய பொலிஸார் காலை 10.40 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்நிலையில் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்