கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு ஆக்லாந்தில் உள்ள கடையில் பட்டப்பகலில் சரமாரியாக புகுந்து கொள்ளையடித்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

காலை 11.30 மணியளவில் New Lynn இல் உள்ள LynnMall அருகே அமைந்துள்ள ஒரு வணிக நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அந்த நபர் தனது முகத்தில் முகமூடி அணிந்திருந்ததாகவும் கடையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தை திருடியதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் ஒரு காரில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

கடையில் இருந்த ஊழியர்கள் காயமின்றி தப்பியதாகவும் கடைக்கு பின்னால் இருந்த ஒரு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர் எனவும் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளியை‌ பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்