இலங்கை

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (14) முதல் ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 22 முதல் டிசம்பர் 13 வரை 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இது தொடர்பான வாக்களிப்பு டிசம்பர் 13ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு நடைபெற உள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, ​​தினமும் காலை 09.30 மணி முதல் 10 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் 05 கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, பின்னர் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விவாதம் நடைபெறும்.