இந்தியா: தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, தீபாவளி தருணத்தில் தனது மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்ததால் தீபாவளி கொண்டாடுவதை கடந்த ஏழேட்டு ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி முடிந்ததும் இவர் லண்டன் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

அவர் லண்டன் செல்வதற்கான காரணம் என்ன எனத் தெரியாமல் லோக்கல் அதிமுக நிர்வாகிகளே குழம்பிப் போய் உள்ளனர். இந்தப் பயணமானது முழுக்க முழுக்க செல்லூர் ரஜுவின் தனிப்பட்ட பயணம் என்பதால் அதிமுக மேலிடமும் அவரது ஒவ்வொரு அசைவுகளையும், குறிப்பாக லண்டன் பயணத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறது.

இதனிடையே செல்லூர் ராஜூ தனது லண்டன் பயணத்தை பற்றி தன்னுடன் இருப்பவர்களுக்கே பெரிதாக எந்த தகவலும் சொல்லவில்லை என மதுரை மாநகர அதிமுகவினர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.