தென்கிழக்கு ஆக்லாந்தில் இன்று காலை இரண்டு கார்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் வாகனத்தில் சிக்கிக்கொண்டனர்.

காலை 6 மணிக்கு முன்னதாக Flatbush School சாலை மற்றும் Murphys சாலை சந்திப்பில் இந்த விபத்து நடந்தது.

தீயணைப்பு மற்றும் அவசரநிலை NZ வடக்கு ஷிப்ட் மேலாளர் ஜோஷ் பென்னேஃபாதர் கூறுகையில், இரண்டு கார்களில் மூன்று பேர் சிக்கிக்கொண்டனர்

அவர்களை வாகனங்களில் இருந்து அகற்ற மீட்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டன என தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்தில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

செய்தி நிருபர் - புகழ்