Ōpōtiki இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்‌ ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 21 அன்று Ōpōtiki ஐச் சுற்றியுள்ள கார்கள் மற்றும் வீடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது 20 வயதான பெண் காயமடைய வழிவகுத்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 28 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நவம்பர் 8 மற்றும் 16 ஆகிய திகதிகளில் Ōpōtiki மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்