விஜய்யின் நடிப்பில் கடந்த அக்டோபர் 19 ஆம் திகதி வெளியான திரைப்படம் லியோ. இப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு சமீபத்தில் வேறெந்த படத்திற்கும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் இடையே லியோ ஹைப்பை உருவாக்கி இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் லியோ திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகின்றது. என்னதான் லியோ படத்திற்கு ஒரு சில கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் படத்திற்கு பேராதரவு தருகின்றனர். அதன் காரணமாகவே இப்படம் வசூலில் சாதனை செய்து வருகின்றது.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஏமாற்றத்தில் இருந்தனர். இதையடுத்து அவர்களின் ஏமாற்றத்தை போக்கி அவர்களை மகிழ்விக்கும் வகையில் தற்போது லியோ வெற்றி விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

கடந்த சில மாதங்களாக பல சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்க தளபதி என்ன பேசுவார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர்.இந்த சமயத்தில் விஜய் அனைத்து விஷயங்களை பற்றியும் ஸ்மார்ட்டாக பேசி ரசிகர்களை மேலும் ஒருமுறை கவர்ந்தார். குறிப்பாக சூப்பர்ஸ்டார் ஒருவர் தான் என கூறி பல மாதங்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். விஜய் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றார் என்பது அவரின் பேச்சை பார்க்கும்போதே தெரிகின்றது. குறிப்பாக நகைச்சுவை கலந்து விஜய் பேசியது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

லியோ படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது அனிருத்தின் இசை தான்.படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்த அனிருத் லியோ வெற்றி விழாவில் பங்கேற்கவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.ஏன் அனிருத் பங்கேற்கவில்லை என ரசிகர்கள் பேசி வர தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

அனிருத் தற்போது தமிழில் மட்டுமின்றி இந்தியளவில் பிரபலமான இசையமைப்பாளராகிவிட்டார். எனவே பட வேலைகளில் பிசியாக இருந்ததாலும், அனிருத் சென்னையில் இல்லாத காரணத்தாலும் தான் லியோ வெற்றி விழாவில் அவர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.