இலங்கை

4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவுக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.

ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3 வது சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி ரணில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 16 ஆம் திகதி சீனாவிற்கு சென்ற ஜனாதிபதி ரணில், 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நேற்று நாடு திரும்பியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.