பிக் பாஸ் 7 வீட்டில் ஷாப்பிங் ரீபேமென்ட் டாஸ்கில் தோல்வி அடைந்தால் சாப்பாடு கொடுக்கப்படாது. தோல்வி அடைந்தவர்களுக்கு பிக் பாஸ் வீட்டில் சமைக்கும் உணவு கொடுக்கப்படாது.

இந்நிலையில் தான் மீண்டும் ஷாப்பிங் ரீபேமென்ட் டாஸ்க் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். போர்டில் பாலை உருட்டிவிட்டு அது கீழே வருவதற்குள் பசிலை சால்வ் செய்ய வேண்டும் என விதிமுறையை வாசித்தார் விசித்ரா.

இதையடுத்து யுகேந்திரன் வாசுதேவன், ரவீணா தாஹா, மணி சந்திரா ஆகியோர் பாலை உருட்டிவிட்டு பசிலை சால்வ் செய்ய முயன்றார்கள். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்த டாஸ்கில் தோற்றுவிட்டதால் பிக் பாஸ் வீட்டார் வீட்டில் சமைக்கப்படும் எந்த உணவுப் பொருளையும் உண்ணக் கூடாது என்றார் பிக் பாஸ்.

அவர் அப்படிச் சொன்னபோது தான் ஜோவிகா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பசிக்கும்ல அப்ப சாப்பிடக் கூடாதா என ஒருவர் கேட்க, மாயா கிருஷ்ணனோ பயங்கரமாக சிரிப்பதுடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.

இந்நிலையில் ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, டாஸ்க் செய்ய ரவீணாவையும், மணியையும் ஏன்யா ஒன்னா அனுப்பி வச்சீங்க? அய்யோ பாவம், போட்டியாளர்களுக்கு இன்று சோறு கிடைக்காமல் பட்டினியாக இருக்கப் போகிறார்களா? என கூறுகின்றனர்.

அது என்ன எப்பொழுது பார்த்தாலும் போட்டியாளர்களின் சாப்பாட்டிலேயே கை வைக்குறீங்க பிக் பாஸ் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.