Napier இல் இன்று அதிகாலை மதுபானக் கடையொன்றை அடித்து நொறுக்கி கொள்ளையில் ஈடுபட்ட ஒன்பது குற்றவாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

துப்பறியும் க்ளென் யூல் கூறுகையில், ஒன்பது இளைஞர்களும் கடையின் முன்பக்க கதவை கை மற்றும் கால்களில் உடைத்து உள்ளே புகுந்தனர்.

இதன்போது ஒரு குற்றவாளியின் வலது காலின் அடிப்பகுதி வெட்டப்பட்டு பலத்த காயமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் சிதறி இருந்த இரத்தத்தின் அளவு, அவர் கடுமையான காயத்தால் பாதிக்கப்பட்டார் என்பதைக் குறிக்கிறது என அவர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 3.31 மணியளவில் Carlyle தெருவில் உள்ள உள்ள Big Barrel மதுபானக் கடையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றதாக யூல் கூறினார்.

கடைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய பிறகு, அதிக அளவு ஆல்கஹால் மற்றும் வேப் பொருட்களை எடுத்துக் கொண்டு குற்றவாளிகள் நான்கு வாகனங்களில் தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை காட்சிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் யூல் கூறினார்.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் தகவல்களைக் கொண்ட எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்