கடந்த வாரம் Tairāwhiti இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் இரண்டு கும்பல் உறுப்பினர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோங்க்ரல் கும்பலுக்கும் பிளாக் பவர் உறுப்பினர்களுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை சமாளிக்க காவல்துறை சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியதை அடுத்து இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

Gisborne மற்றும் Waipirio Bay ஆகிய இடங்களில் உள்ள முகவரிகளில் தேடுதல் வாரண்ட்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர் டேரன் பாக்கி தெரிவித்தார்.

இதன்போது இரண்டு கும்பல் உறுப்பினர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர் என பாக்கி கூறினார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் 18,27, மற்றும் 30 வயதுடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இவர்கள் மூவரும் Gisborne மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்