Northland இல் உள்ள சிறிய நகரமான Ruakākā வில் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில்‌ இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெய்னா பிக்கரிங் என்ற 24 வயதான இளைஞனின் சடலம் அக்டோபர் 12 ஆம் திகதி Northland இல் உள்ள தெருவில் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய நபர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு Whangārei மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் அக்டோபர் 17 ஆம் திகதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய நபர் நேற்றைய தினம் காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று Whangārei நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்