Gisborne இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில் Stout தெரு மற்றும் Taruheru Crescent பகுதியில் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக பொதுமக்களிடமிருந்து Tairāwhiti காவல்துறைக்கு பல அழைப்புகள் வந்தன.
இந்நிலையில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரின் காலில் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கும்பலுடன் தொடர்புடையவை என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tairāwhiti பகுதி கமாண்டர் இன்ஸ்பெக்டர் சாம் அபெரஹாமா கூறுகையில், புலனாய்வாளர்கள் இன்று காட்சி பரிசோதனை செய்து வருவதாகவும், ரோந்து பணி ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் புகாரளிக்க காவல்துறைக்கு அழைப்பு விடுத்த ஏராளமான மக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அல்லது பாதுகாப்பற்ற செயலைக் கண்டால் உடனடியாக பொலிஸை அழைக்குமாறு கிஸ்போர்ன் உள்ளூர்வாசிகளிடம் அபெரஹாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எங்கள் சமூகத்தில் ஏற்படும் தீங்குகளைத் தடுக்க உங்கள் அழைப்பு முக்கியமானது என்று அவர் கூறினார்.
செய்தி நிருபர் - புகழ்