ஆக்லாந்தின் தெற்கு நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்தைத் தொடர்ந்து கிழக்கு Tamaki சாலைக்கும் Princes தெருவுக்கும் இடையே தெற்கு நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன, ஆனால் பின்னர் அவை மீண்டும் திறக்கப்பட்டன.

தீவிர விபத்து பிரிவு பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்