கடந்த மாதம் Cambridge இல் தாக்குதல் நடத்தி அதனை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் செப்டம்பர் 27 அன்று Queen தெருவில் உள்ள உணவகம் அருகே நடந்தது. மற்றும் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது இளைஞர்கள் தாங்களாகவே குற்றங்களைச் செய்து அவற்றை படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிடுவது மிகவும் பொதுவானதாகி வருகிறது என்று Cambridge சார்ஜென்ட் பென் ஜோல் கூறினார்.

இது மன்னிக்க முடியாத குற்றம் மற்றும் இத்தகைய நடத்தைகள் எங்கள் சமூகத்தில் பொறுத்துக்கொள்ளப்படாது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் காயப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் ஹமில்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்