Northland இன் Moerewa நகரில்‌ பெண் ஒருவர் இன்று பிற்பகல் நாய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 4.40‌ மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த குடும்ப உறுப்பினர் ஒருவர், உயிரிழந்தவர் தனது அத்தை என்றும், அந்த பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது நாய் ஒன்று வந்து அவரை தாக்கியதாகவும் கூறினார்.

மேலும் இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே அதிகாரிகள் வருவதற்குள் நாயை பக்கத்து வீட்டுக்காரர் சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்