ஆஸ்கர் நாயகன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தன்னுடைய 25 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமாக, மனைவியுடன் எடுத்து கொண்ட, செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழகத்தில் பிறந்து, திரையுலகினர் மத்தியில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை பெற்று இந்தியர்களுக்கே பெருமை சேர்த்த திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

இன்று தன்னுடைய 25 வது திருமண நாளை கொண்டாடும் விதமாக, அன்பு மனைவியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இத்துடன் 25+1 என குறிப்பிட்டு, 25 ஆண்டு திருமண வாழ்க்கை கடந்து 26 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைப்பதை தெரிவித்துள்ளார்..

ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு வெளியிட்ட இந்த செல்ஃபி புகைப்படம், வைரலாகி இணையத்தையே கலக்கி வருகிறது.