வீடுகளில் மாவீரர்களை நினைவுகூர, ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

 

மாவீரர்களுக்கு பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் ஊடாக பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. 

 

அந்நிலையில், நாளை (27) மாலை 6.05 மணிக்கு மாவீரர்கள் நினைவாக மணி ஒலிக்கச்செய்து, 6.06 மணிக்கு ஒரு நிமிட மௌன வணக்கம் செலுத்தி, மாலை 6.07 மணிக்கு, மாவீரர் நினைவுச் சுடர்களை ஏற்றி வணக்கம் செலுத்துமாறு, ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் கோரியுள்ளன.

 

இது தொடர்பில் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடி மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளன.