இன்று காலை வைகாடோவில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

40 மற்றும் 42 வயதுடைய இரண்டு ஆண்கள், Huntly பகுதியில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, ​​இரண்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாரிய அளவு அளவு கஞ்சா மற்றும் பணம் ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் வைகாடோ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.