Napier இல் Hyderabad சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து மூன்று பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செயல் ஆய்வாளர் நீல் சாண்டர்ஸ் கூறுகையில், நேற்றைய தினம் அதிகாலை 5.30 மணியளவில் இரண்டு பேர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கண்ணாடிக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சிகரெட் மற்றும் உணவைப் பொருட்கள் சிலவற்றை திருடினர்.

மற்றொரு நபர் திருடப்பட்ட காரில் வெளியே காத்திருந்த நிலையில் மூவரும் குறித்த வாகனத்தில் தப்பிச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் அவர்கள் Onekawa என்ற இடத்தில் உள்ள ஒரு முகவரியில் கண்டுபிடிக்கப்பட்டனர் மற்றும் திருடப்பட்ட சில பொருட்களை மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் மூவரும் Hastings இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் 16 மற்றும் 14 வயதுடைய இருவர் மீது கடுமையான கொள்ளைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன் 13 வயதுடைய மற்றொருவர் இளைஞர் உதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.