மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ராசா கண்ணு பாடலை ஏஆர் ரஹ்மான் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

யுகபாரதியின் வரிகளில் 
இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் பாடலை வைகைப்புயல் வடிவேலு பாடியுள்ளார்.

"மலையில தான் தீப்பிடிக்குது ராசா... என் மனசுக்குள்ளதான் வெடி வெடிக்குது ராசா" என்ற முதல் வரிகளிலேயே வடிவேலுவின் குரல் கிறங்கடிக்கிறது.

சாதிய தீண்டாமையில் மனம் பொறுமிக் கிடக்கும் ஒரு சமூகத்தின் வலிகள் நிறைந்த வரிகளைக் கோர்த்து இந்தப் பாடலை எழுதியுள்ளார் யுகபாரதி.

அதேபோல், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஏஆர் ரஹ்மானின் கிராமத்து இசையை இந்தப் பாடலில் கேட்க முடிகிறது.

இந்தப் பாடலின் ஆரம்பம் முதல் இறுதிவரை வடிவேலு கண்கலங்கி பாடியுள்ளது ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது.

அதேபோல், வடிவேலுவின் குரல் இந்தப் பாடலுக்கு தனி மேஜிக்காக அமைந்துள்ளது.