இயக்குநர் சசி இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பலத்த வரவேற்பைப் பெற்றது.

பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்படத்தின் ஷூட்டிங்கில் விஜய் ஆண்டனி விபத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிச்சைக்காரன் 2 மே 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்றுமுன்தினம் சென்னையில் நடந்தது. அதில் விஜய் ஆண்டனி, அவரது மனைவி, இயக்குநர்கள் சசி, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய விஜய் ஆண்டனி‌...

நான் முன்பே கூறியது போல் பிச்சைக்காரன் படம் சசி எனக்கு போட்ட பிச்சை ‌என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் முதல் பாகத்தில் அம்மா - மகன் செண்ட்டிமெண்ட் இருந்தது போல் இரண்டாம் பாகத்தில் அண்ணன் - தங்கை செண்ட்டிமெண்ட் இருக்கும் என அவர் தெரிவித்தார்.