இந்தியா: தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13 ஆம் திகதி மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் விஷச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக நிர்வாகி விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் செங்கல்பட்டு மாவட்ட தெற்கு பாஜக ஓபிசி அணியின் செயலாளராக இருந்து வருகிறார்.

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் விஜயகுமார் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.