இந்தியா: தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அ.வாசதேவனூரில் அனுமதியின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிகம்ப‌ம் நாட்டியிருந்த நிலையில் அதனை அகற்றுமாறு வட்டாட்சியர் இந்திரா உத்தரவிட்டிருக்கிறார்.

இதனால் ஆத்தரமடைந்த விசிக மாவட்டச் செயலாளர் தனபால், மேஜிஸ்திரேட் என்றால் என்ன? நீ பேசுறதுக்கு ஆள் கிடையாது, வெளியே போ! என்று ஒருமையிலும், எவன் வந்தாலும் கை, கால்களை வெட்டி விடுவேன்.‌உனக்கு ஏன் மரியாதை கொடுக்க வேண்டும், என்று கூறி தகாத வார்த்தைகளாலும் பேசியதாக கூறப்படுகிறது.

பொலிஸார் அருகில் இருக்கும் போதே பெண் வட்டாட்சியரை விசிக மாவட்டச் செயலாளர் தனபால் பகிரங்கமாக மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவாகரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.