Northland நகரமான Ruakākā வில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் Northland பொலிஸார் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இன்று காலை Peter Snell Drive என்ற இடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, Peter Snell Drive இல் உள்ள ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாக Northland CIB இன் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிரிட்ஜெட் டோல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எங்கள் விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது மற்றும் விசாரணையின் ஒரு பகுதியாக நாங்கள் தற்போது ஒரு நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் சமூகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் வயதை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

அப்பகுதியில் அதிக பொலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்று டோயல் கூறினார்.

இதனிடையே சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Whangārei மேயர் வின்ஸ் கோகுருல்லோ தனது இரங்கலைப் பகிர்ந்து கொண்டார், இது ஒரு சோகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் என்று விவரித்தார்.