இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதை அடுத்து வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார்.

வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்து, படத்தை கைவிட விரும்பாத பாலா, அருண்விஜய்யை வைத்து அப்படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் இருந்து விலகினார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இதனிடையே அருண்விஜய்யை பாலா டார்ச்சர் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தின் மூலம் நல்ல பெயரை பெற்றுவிட வேண்டும் என்ற வெறியோடு அருண்விஜய் இருப்பதால், பாலா என்ன சொன்னாலும், அதற்கு மறுபேச்சு பேசாமல் அருண்விஜய் வணங்கா படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வணங்கான் படத்திற்காக சூர்யா இதுவரை 7 கோடி அளவிற்கு செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா படத்தில் இருந்து விலகியதுமே, பாலா அந்த பணத்தை கொடுத்துவிடுவார் என்று நினைத்து சூர்யா காத்திருந்த போதும் பணம் திருப்பி கொடுக்காததால் சூர்யா பாலாவிடம் பணத்தை கேட்டதாகவும் கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன்‌ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வேறுவழியில்லாமல் சூர்யா செலவு செய்த 7 கோடி ரூபாயை சூர்யாவுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பாலாவால் தான் தனது சினிமா வாழ்க்கையே தொடங்கியது என்ற நன்றி கூட பார்க்காமல், சூர்யா இப்படி நடந்து கொண்டாரா என்று பல சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.