தெற்கு Taranaki இல் சூறாவளி தாக்கியதில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.

இன்று அதிகாலை 5.55 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தை அடுத்து தீயணைப்பு மற்றும் அவசரநிலை நியூசிலாந்து (FENZ) சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

Awatuna வில் உள்ள Eltham சாலையில் எதிரெதிரே இருந்த குறித்த இரண்டு வீடுகளை சூறாவளி தாக்கியதை அடுத்து கூரைகள் சேதமடைந்தன மற்றும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

மேலும் சூறாவளியால் வேலிகளும் சேதமடைந்தன. இச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த அவசர சேவைப் பிரிவினர் அறுந்து விழுந்த மின் கம்பிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.