பெரு நாட்டில் ஒரு வினோத திருட்டு நடந்துள்ளது. அதாவது பெருவில் உள்ள ஒரு ஷூக்கடைக்குள் பூட்டை உடைத்து 3 திருடர்கள் நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த ஸ்னீக்கர்ஸ் ஷூக்களை திருடியுள்ளனர். சுமார் 200 ஷூக்களை திருடி கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர்.

இதையடுத்து காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அங்கு வந்து பார்த்த போது காணாமல் போன ஷூக்களின் மதிப்பு ரூ 10 லட்சம் எனவும் ஆனாலும் வலது கால்களுக்கு பொருத்தமான ஷூக்களையே அவர்கள் திருடியுள்ளதும் தெரியவந்துள்ளது.

எதற்காக வலது காலுக்கு பொருந்தும் ஷூக்களை மட்டும் திருடினர் என்பது வியப்பாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து சம்பவம் சமூகவலைதளங்களில் பரவியது.

ஒரு ஷூவை வைத்து கடைக்காரரும் ஒன்றும் செய்ய போவதில்லை, திருடர்களும் ஒன்றும் செய்ய போவதில்லை, இதெல்லாம் வீண் முயற்சி என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். வலது கால் ஷூக்களை மட்டும் திருடியவர்கள் புதிய திருடர்களா? அச்சத்தில் இப்படி திருடிவிட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.