தெற்கு ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றிரவு 9.15 மணியளவில் Manurewa வில் உள்ள Browns வீதியில் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் என்ன நடந்தது என்பதை கண்டறியும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மற்றும் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.